என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலி
Byமாலை மலர்1 Jun 2020 1:07 PM GMT (Updated: 1 Jun 2020 1:07 PM GMT)
புதுக்கோட்டையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் கடந்த 29-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பாதுகாப்பான முறையில் எரியூட்டப்பட்டது.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரது வீடு இருக்கும் புதுக்கோட்டை நகரம் வடக்கு 5-ஆம் வீதி ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதியவர் இறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முதலில் கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருந்து வந்தது. அருகில் உள்ள திருச்சி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் யாரும் பாதிக்கவில்லை. தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களால் அங்கு பரவல் அதிகரித்துள்ளது. மேலும் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் கடந்த 29-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று அவர் இறந்தார். இதையடுத்து அவரது உடல் பாதுகாப்பான முறையில் எரியூட்டப்பட்டது.
அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரது வீடு இருக்கும் புதுக்கோட்டை நகரம் வடக்கு 5-ஆம் வீதி ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதியவர் இறந்தது புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் கொரோனா உயிரிழப்பாகும். அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முதலில் கொரோனாவின் பிடியில் சிக்காமல் இருந்து வந்தது. அருகில் உள்ள திருச்சி மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் யாரும் பாதிக்கவில்லை. தற்போது வெளியூர்களில் இருந்து வருபவர்களால் அங்கு பரவல் அதிகரித்துள்ளது. மேலும் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது. இது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X