என் மலர்
செய்திகள்

அதிமுக சார்பில் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகள்- அமைச்சர் வழங்கினார்
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே காடாம்புலியூரில் அ.தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சர் எம்.சி. சம்பத் நிவாரணஉதவிகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் தேவனாதன் தலைமை தாங்கினார். ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்கள், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மர வேலை செய்பவர்கள், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் இந்திராநகர் மாற்று குடியிருப்பில் வசிக்கும் இருளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை ஆகிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் கலைஅரசன், மாவட்ட கவுன்சிலர் பெருமாள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பத்திரக்கோட்டை கல்யாண சுந்தரம், முத்தாண்டிக்குப்பம் பிரபு, பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கீழ்மாம்பட்டு வசந்தகுமாரி ஜெயராமன், ஒன்றிய இணை செயலாளர் மாணிக்கம், துணை செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் சந்தானம், கூட்டுறவு சங்க தலைவர் அருள் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இந்திரா வடிவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மேல்மாம்பட்டு பஞ்சாயத்துதலைவர் முத்துலிங்கம், தோப்பு கொல்லை சட்டநாதன், மருங்கூர் இளங்கோ, சரவணன், சிவக்குமார், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






