என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலிபால் விளையாடுவதில் கோஷ்டி மோதல்- 8 பேர் படுகாயம்
Byமாலை மலர்30 May 2020 3:45 PM GMT (Updated: 30 May 2020 3:45 PM GMT)
நெல்லிக்குப்பம் அருகே வாலிபால் விளையாடுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குணமங்கலம் சேர்ந்தவர் தேவதாஸ். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.
இந்த நிலையில் தேவதாஸ் அணியினரும், தினேஷ்குமார் அணியினரும் அதே ஊரில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தில் இரு தரப்பினரும் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இதில் மதியழகன், சிவசக்தி, அசோக்குமார், கந்தசாமி, லட்சுமி, ரவி, ஜனார்த்தனன், ராயர் ஆகிய 8 பேருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் குணமங்கலத்தை சேர்ந்த தேவதாஸ், ஜனார்த்தனன், பிரேம்குமார், மணிபாலன், அருண், ராயர், தினேஷ் குமார், மதியழகன், சிவசக்தி, ஹரிபாபு, அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே குணமங்கலம் சேர்ந்தவர் தேவதாஸ். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார்.
இந்த நிலையில் தேவதாஸ் அணியினரும், தினேஷ்குமார் அணியினரும் அதே ஊரில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்தில் இரு தரப்பினரும் பேசிக்கொண்டிருந்தபோது மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மாறி மாறி கத்தி, இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.
இதில் மதியழகன், சிவசக்தி, அசோக்குமார், கந்தசாமி, லட்சுமி, ரவி, ஜனார்த்தனன், ராயர் ஆகிய 8 பேருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் குணமங்கலத்தை சேர்ந்த தேவதாஸ், ஜனார்த்தனன், பிரேம்குமார், மணிபாலன், அருண், ராயர், தினேஷ் குமார், மதியழகன், சிவசக்தி, ஹரிபாபு, அசோக் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X