search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 1-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கொரோனா வைரஸ்


    இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று  874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்தது.

    இந்நிலையில் இன்று 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 900-த்தை கடப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது.

    இன்று 687 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×