search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை

    செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 61). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர் செங்கல்பட்டு சக்திநகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு சென்று அங்கு 2 நாட்களாக தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை சாந்திநகரில் உள்ள அவரது வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், உங்கள் வீட்டின் வெளி கேட் மற்றும் கதவு திறந்து இருப்பதாக போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பாலகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோ மற்றும் அலமாரிகள் உடைக்கப்பட்டிருந்தது.

    அதன் அருகில் இருந்த பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலகிருஷ்ணன் செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். பாலகிருஷ்ணனின் வீட்டின் எதிரே திருப்போரூர் கூட்டு சாலை சோதனைச்சாவடி இயங்கி வருகிறது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் இருப்பர். அதையும் மீறி இந்த இடத்தில் கொள்ளை போயுள்ளது பொதுமக்களுடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×