என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடலூர் மாவட்ட ரேசன் கடையில் ஜூன் மாதத்துக்கான டோக்கன் வினியோகம்
Byமாலை மலர்29 May 2020 9:20 AM GMT (Updated: 29 May 2020 9:20 AM GMT)
கடலூர் மாவட்ட ரேசன் கடையில் ஜூன் 1 -ந் தேதி முதல் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் மே 31-ந் தேதி வரை தமிழக அரசு சார்பில் கொரானோ தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதன்பேரில் கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 1,416 ரேசன் கடைகள் இருந்து வருகின்றன. இதில் 7 லட்சத்து 18 ஆயிரத்து 428 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து ஜூன் 1 -ந் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. இதில் ஒருநாளைக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தினந்தோறும் 100 பேர் என்ற சுழற்சி முறையில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகரிக்காமல் சமூக இடைவெளியில் நின்று பொதுமக்கள் எளிதாக பொருட்கள் வாங்க வேண்டி இந்த டோக்கன் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரானோ தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் மே 31-ந் தேதி வரை தமிழக அரசு சார்பில் கொரானோ தொற்றுநோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இதன்பேரில் கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 1,416 ரேசன் கடைகள் இருந்து வருகின்றன. இதில் 7 லட்சத்து 18 ஆயிரத்து 428 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து ஜூன் 1 -ந் தேதி முதல் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. இதில் ஒருநாளைக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் தினந்தோறும் 100 பேர் என்ற சுழற்சி முறையில் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகரிக்காமல் சமூக இடைவெளியில் நின்று பொதுமக்கள் எளிதாக பொருட்கள் வாங்க வேண்டி இந்த டோக்கன் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரானோ தொற்றுநோய் பரவாமல் தடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X