search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா

    கடலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 பேரையும் பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் தண்டபாணி நகரை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணி புரிந்த லேப் டெக்னீசியன் 35 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த கணவர், 2 பிள்ளைகள், மாமனார் மற்றும் மாமியாருக்கு என 5 பேருக்கும் தொற்று நோய் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்தப்பகுதி முழுவதும் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் 5 பேருக்கும் தொற்று நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 பேரையும் பாதுகாப்பாக ஆம்புலன்சு மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அந்த பகுதி முழுவதும் மீண்டும் கிருமி நாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணி நடைபெற்றது. இது மட்டுமன்றி அந்தப் பகுதி முழுவதும் கடும் கட்டுப்பாடு விதித்ததுடன் பாதிக்கப்பட்ட 5 பேரின் வீட்டுக்கு சென்றவர்கள் யார் ? வீட்டுக்கு வந்துள்ளனர் உள்ளிட்டவை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது

    Next Story
    ×