என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்துக்காக மூதாட்டி கொலை- பேரன் கைது
Byமாலை மலர்27 May 2020 4:19 PM GMT (Updated: 27 May 2020 4:19 PM GMT)
லத்தேரி அருகே சொத்துக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் பேரனை கைது செய்தனர்.
காட்பாடி:
காட்பாடி தாலுகா லத்தேரியை அடுத்த பி.என். பாளையத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 75). இவருடைய மனைவி தனபாக்கியம் (70). இவர்களுக்கு உத்திரகுமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அருணாச்சலம் யாருக்கும் இன்னும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் 23-ந்தேதி உத்திரகுமாரின் மகன் கோட்டீஸ்வரன், தாத்தா அருணாச்சலம் வீட்டுக்குச் சென்றார். அங்கு, அவரிடம் சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த கோட்டீஸ்வரன் பாட்டி தனபாக்கியத்தை இரும்புக்கம்பியால் தாக்கி உள்ளார். அதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து லத்தேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து கோட்டீஸ்வரனை கைது செய்தார். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனபாக்கியம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். முதலில் இந்த வழக்கு கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டது. தனபாக்கியம் இறந்ததால், அந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி தாலுகா லத்தேரியை அடுத்த பி.என். பாளையத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 75). இவருடைய மனைவி தனபாக்கியம் (70). இவர்களுக்கு உத்திரகுமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அருணாச்சலம் யாருக்கும் இன்னும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் 23-ந்தேதி உத்திரகுமாரின் மகன் கோட்டீஸ்வரன், தாத்தா அருணாச்சலம் வீட்டுக்குச் சென்றார். அங்கு, அவரிடம் சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த கோட்டீஸ்வரன் பாட்டி தனபாக்கியத்தை இரும்புக்கம்பியால் தாக்கி உள்ளார். அதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து லத்தேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து கோட்டீஸ்வரனை கைது செய்தார். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனபாக்கியம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். முதலில் இந்த வழக்கு கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டது. தனபாக்கியம் இறந்ததால், அந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X