search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து காயம்
    X
    விபத்து காயம்

    கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து டிரைவர் காயம்

    கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து டிரைவர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோத்தகிரி:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மருள்பட்டியை சேர்ந்தவர் வீரமுத்து(வயது30). இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று காலை ஆம்புலன்சை பழுது பார்ப்பதற்காக சோலூர் மட்டத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி வந்தார். குயின்சோலை அருகே ஒரு வளைவில் வந்தபோது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவரை மீட்டனர். இதில் லேசான காயம் அடைந்த டிரைவர் வீரமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×