என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோத்தகிரி அருகே 20 அடி பள்ளத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து டிரைவர் காயம்
கோத்தகிரி:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மருள்பட்டியை சேர்ந்தவர் வீரமுத்து(வயது30). இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நேற்று காலை ஆம்புலன்சை பழுது பார்ப்பதற்காக சோலூர் மட்டத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி வந்தார். குயின்சோலை அருகே ஒரு வளைவில் வந்தபோது ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவரை மீட்டனர். இதில் லேசான காயம் அடைந்த டிரைவர் வீரமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்