என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வில்லியனூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்- 12 பேர் மீது வழக்கு
சேதராப்பட்டு:
வில்லியனூரை அடுத்த தமிழக பகுதியான இரும்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனுஷ் (வயது42) டெய்லர். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டு புகை பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பேர் தனுசிடம் ரூ.200 பணம் கேட்டனர். அதற்கு தனுஷ் கொடுக்க மறுத்ததால் அவர் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றனர். இதை தட்டிக் கேட்ட தனுசை தாக்கினர்.
இதற்கு பதிலுக்கு பதிலாக தனுஷ் தரப்பினர் கமல் தரப்பினரை தாக்கினர்.
இதுகுறித்து தனுஷ், சாமுண்டீஸ்வரி இருவரும் தனித்தனியாக கோட்டக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனுசை தாக்கிய எழில், கமல், சரண் உள்ளிட்ட 7 பேர் மீதும், கமலை தாக்கிய தனுஷ், ராஜ், விஷ்ணு உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்