என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலி
Byமாலை மலர்26 May 2020 6:22 AM GMT (Updated: 26 May 2020 6:22 AM GMT)
மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
தாம்பரம்:
சென்னை கொரட்டூர், சாமி அவென்யூ, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 30). அதேபோல் மண்ணிவாக்கம், மண்ணீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் வாசு(54). இவர்கள் இருவரும், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று மதியம் பணி முடிந்ததும் வாசுவை அவரது வீட்டில் இறக்கி விடுவதற்காக ராமானுஜம் தனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிக்கொண்டு வந்தார். ‘டியூப் லெஸ்’ டயர் என்பதால் வாகனத்தின் டயரில் இருந்து காற்று இறங்கியதை இருவரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.
முடிச்சூர் பெரிய ஏரி அருகே வண்டலூர் வெளிவட்ட சாலையில் வேகமாக வந்தபோது, டயர் பஞ்சரானதால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடதுபுறமாக இழுத்துச் சென்றது. அதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறிய வாசு கீழே விழுந்ததில் அவரின் முகம் சாலையில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராமானுஜம் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதி பலியானார்.
இது குறித்து தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X