என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ் பரிசோதனை
வங்கி ஊழியரின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி
நகை மதிப்பீட்டாளரின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி கிளை மூடப்பட்டது. வங்கி ஊழியர்கள், குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் நகை மதிப்பீட்டாளரின் 8 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 13 பேருக்கும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி கிளை மூடப்பட்டது. வங்கி ஊழியர்கள், குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் நகை மதிப்பீட்டாளரின் 8 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 13 பேருக்கும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






