search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    வங்கி ஊழியரின் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி

    நகை மதிப்பீட்டாளரின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வங்கி கிளை மூடப்பட்டது. வங்கி ஊழியர்கள், குடும்பத்தினர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

    இதில் நகை மதிப்பீட்டாளரின் 8 வயது மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    அவர்களில் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 13 பேருக்கும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×