என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைவாசல் அருகே கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் விபத்தில் பலி
Byமாலை மலர்25 May 2020 8:38 AM GMT (Updated: 25 May 2020 8:38 AM GMT)
தலைவாசல் அருகே கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைவாசல்:
திட்டக்குடியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் இந்திரஜித் (வயது 20). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஊரடங்கு காரணமாக விடுமுறையில் வீட்டில் இருந்த இந்திரஜித் தனது நண்பர்களை காண, மோட்டார் சைக்கிளில் சேலம் மாவட்டத்துக்கு நேற்று வந்தார். தலைவாசல் அருகே சார்வாய் புதூர் அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சறுக்கியது. இதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இந்திரஜித் பலியானார்.
இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X