என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
Byமாலை மலர்25 May 2020 7:46 AM GMT (Updated: 25 May 2020 7:46 AM GMT)
வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வெல்லத்தை சாராய வியாபாரிக்கு விற்பனை செய்த புகாரில் வேலூர் தெற்கு போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி காமினி உத்தரவிட்டார்.
வேலூர்:
வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒடுகத்தூரை அடுத்த முத்துகுமரன் மலையடிவாரத்தில் கடந்த 4-ந் தேதி இரவு இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேனில் சாராயம் காய்ச்சுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 3 டன் வெல்லம் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 டன் வெல்லமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த வெல்லத்தை சாராயம் காய்ச்சும் வியாபாரியிடம் போலீசார் விற்பனை செய்ததாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில், இன்ஸ்பெக்டர் லட்சுமி வேப்பங்குப்பம் பகுதி சாராய வியாபாரிகளிடம் பணம் வாங்கி கொண்டு சாராய விற்பனையை அனுமதித்து உள்ளார். வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 3 டன் வெல்லத்தை தமிழக அரசின் வாணிப கிடங்கில் ஒப்படைக்காததும், அதனை சாராயம் காய்ச்சும் வியாபாரியிடம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. மேலும் இதில், இன்ஸ்பெக்டர் லட்சுமி, வேப்பங்குப்பத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் முனுசாமி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதும் உறுதியானது.
அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, முனுசாமி ஆகியோரை நேற்று முன்தினம் இரவு பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி.காமினி உத்தரவிட்டார். மேலும் சாராய கும்பலுடன் தொடர்புடைய போலீசாரின் விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களின் மீதும் விரைவில் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X