என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் 25 பேருக்கு கொரோனா சிகிச்சை- அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்
Byமாலை மலர்23 May 2020 10:42 AM GMT (Updated: 23 May 2020 10:42 AM GMT)
புதுவையில் தற்போது 23 பேரும், மாகியில் 2 என மொத்தம் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவையில் நேற்று மாலை 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை வடமங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகரை சேர்ந்த தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் இருந்தவர்களுடன் தொடர்புடையவர்கள். இதன்மூலம் புதுவையில் தற்போது 23 பேரும், மாகியில் 2 என மொத்தம் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்காலில் சிகிச்சை பெற்றவர் வீடு திரும்பிவிட்டார். இந்த பட்டியலில் கேரளா மாநிலம் கன்னூர், சென்னை, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் புதுவையை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு திரும்புவோர்களால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
புதுவையில் நேற்று மாலை 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை வடமங்கலம், குரும்பாபேட், வேல்முருகன் நகரை சேர்ந்த தலா ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் இருந்தவர்களுடன் தொடர்புடையவர்கள். இதன்மூலம் புதுவையில் தற்போது 23 பேரும், மாகியில் 2 என மொத்தம் 25 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரைக்காலில் சிகிச்சை பெற்றவர் வீடு திரும்பிவிட்டார். இந்த பட்டியலில் கேரளா மாநிலம் கன்னூர், சென்னை, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் புதுவையை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு திரும்புவோர்களால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X