என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்22 May 2020 12:18 PM GMT (Updated: 22 May 2020 12:18 PM GMT)
கோரிமேட்டில் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு காமராஜர் நகர் வாணிதாசன் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி விமலா (வயது 40). இவர், துப்புரவு பணியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று அதிகாலை விமலா வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது முகத்தில் பனியனால் மூடியபடி வந்த ஒரு வாலிபர் திடீரென விமலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடினான்.
விமலா திருடன்... திருடன் என அலறல் சத்தம் போடுவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். பறிபோன தங்க செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து விமலா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.
செயினை பறித்து சென்ற மர்ம நபர் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களிடம் செயின் பறிப்பு முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த பெண்கள் விழிப்புடன் இருந்ததால் அவர்களிடம் இருந்த நகை தப்பியது.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
புதுவை கோரிமேடு காமராஜர் நகர் வாணிதாசன் நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி விமலா (வயது 40). இவர், துப்புரவு பணியில் தினக்கூலி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று அதிகாலை விமலா வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது முகத்தில் பனியனால் மூடியபடி வந்த ஒரு வாலிபர் திடீரென விமலா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு ஓடினான்.
விமலா திருடன்... திருடன் என அலறல் சத்தம் போடுவதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டான். பறிபோன தங்க செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து விமலா கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.
செயினை பறித்து சென்ற மர்ம நபர் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்த மேலும் 2 பெண்களிடம் செயின் பறிப்பு முயற்சி செய்துள்ளார். ஆனால், அந்த பெண்கள் விழிப்புடன் இருந்ததால் அவர்களிடம் இருந்த நகை தப்பியது.
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி பெண்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X