என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேதாரண்யத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட கிராமம்

    வேதாரண்யத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வசித்து வந்த கிராமத்தை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு ஏற்கனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மார்ச் 23-ம் தேதி சென்னையிலிருந்து சொந்த ஊரான வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சுகாதாரத்துறையினர் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையொட்டி எந்த இடத்தில் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து அவர் வசித்து வந்த கிராமத்தை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

    Next Story
    ×