search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    ஒரகடம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை பறிப்பு

    ஒரகடம் அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த தேவேரியம்பாக்கம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 70). இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் லட்சுமியிடம், உங்கள் மகன் செலவுக்கு பணம் வாங்கி வர சொன்னார் என்று கூறி நூதன முறையில் அவர் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து லட்சுமி ஒரகடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×