search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    சிறப்பு தொழுகை நடத்திய 70 பேர் மீது வழக்கு- மில்லுக்கு சீல் வைப்பு

    பண்ருட்டியில் சிறப்பு தொழுகை நடத்திய 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அரசூர் சாலையில் மணிநகரில் தனியார் மில் உள்ளது. இங்கு மணிலா உடைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்த மில்லில் நேற்று இரவு ரமலான் மாதத்தின் 27-ம் நாள் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ்வுக்கு கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சங்கரன், தாசில்தார் உதயகுமார், இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் ஆகியோர் விரைந்தனர். ஊரடங்கை மீறி தொழுகை நடத்தியதாக 70 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து கோட்டலாம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் தாமோதரன் புகாரின் பேரில் அந்த மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது.
    Next Story
    ×