என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்று: 2 லட்சம் வாழைகள் சேதம்
Byமாலை மலர்20 May 2020 6:00 AM GMT (Updated: 20 May 2020 6:00 AM GMT)
தூத்துக்குடி மாவட்டத்தில் வீசிய பலத்த சூறைக்காற்றில் 2 லட்சம் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்தன. இதனால் 580 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி:
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. நேற்றும் காலையில் பலத்த காற்று வீசியது.
இந்த காற்று தூத்துக்குடி மாவட்ட வாழை விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. வழக்கமாக ஆடி மாதம் அதிக காற்று வீசும் என்பதால் விவசாயிகள் வாழை மரங்களுக்கு கம்புகள் கட்டி சரிந்து விடாமல் பாதுகாப்பார்கள். வைகாசி மாதத்தில் பெரிய அளவில் காற்று வீசுவது கிடையாது. இதனால் விவசாயிகள் தற்போதுதான் வாழைகளுக்கு கம்பு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்று மாவட்டம் முழுவதும் வாழைப்பயிரை அடியோடு சாய்த்து விட்டது. குலைதள்ளிய வாழைகள், விளைந்தும், விளையாமலும் இருக்கும் வாழைத்தார்களும் இடுப்பு முறிந்த நிலையில் தலைகுப்புற கிடந்ததை கண்டு விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். பட்டக்காலிலே படும் என்பது போன்று, ஏற்கனவே கொரோனாவால் மனம் நொந்து போன விவசாயிகளை இந்த சூறைக்காற்று மேலும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டாரத்துக்கு உட்பட்ட அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், குலையன்கரிசல், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 275 விவசாயிகள் 90 ஹெக்டேர் பரப்பில் பயிரிட்டிருந்த வாழை அடியோடு சாய்ந்து விட்டன. இதேபோல் தென்திருப்பேரை பகுதியில் 150 விவசாயிகள் 25 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழையும், செய்துங்கநல்லூரில் 15 விவசாயிகள் 10 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழையும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 140 விவசாயிகள் 50 ஹெக்டேரில் பயிர் செய்திருந்த வாழையும் சாய்ந்து உள்ளன. இதில் சுமார் 2 லட்சம் வாழைகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி வட்டாரத்தில் 2 விவசாயிகள் 2 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த பப்பாளி மரங்களும் அடியோடு சாய்ந்து உள்ளன.
வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. நேற்றும் காலையில் பலத்த காற்று வீசியது.
இந்த காற்று தூத்துக்குடி மாவட்ட வாழை விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டி போட்டு உள்ளது. வழக்கமாக ஆடி மாதம் அதிக காற்று வீசும் என்பதால் விவசாயிகள் வாழை மரங்களுக்கு கம்புகள் கட்டி சரிந்து விடாமல் பாதுகாப்பார்கள். வைகாசி மாதத்தில் பெரிய அளவில் காற்று வீசுவது கிடையாது. இதனால் விவசாயிகள் தற்போதுதான் வாழைகளுக்கு கம்பு கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீசிய சூறைக்காற்று மாவட்டம் முழுவதும் வாழைப்பயிரை அடியோடு சாய்த்து விட்டது. குலைதள்ளிய வாழைகள், விளைந்தும், விளையாமலும் இருக்கும் வாழைத்தார்களும் இடுப்பு முறிந்த நிலையில் தலைகுப்புற கிடந்ததை கண்டு விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். பட்டக்காலிலே படும் என்பது போன்று, ஏற்கனவே கொரோனாவால் மனம் நொந்து போன விவசாயிகளை இந்த சூறைக்காற்று மேலும் அவதிக்கு உள்ளாக்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டாரத்துக்கு உட்பட்ட அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், குலையன்கரிசல், சிவத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 275 விவசாயிகள் 90 ஹெக்டேர் பரப்பில் பயிரிட்டிருந்த வாழை அடியோடு சாய்ந்து விட்டன. இதேபோல் தென்திருப்பேரை பகுதியில் 150 விவசாயிகள் 25 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழையும், செய்துங்கநல்லூரில் 15 விவசாயிகள் 10 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த வாழையும், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 140 விவசாயிகள் 50 ஹெக்டேரில் பயிர் செய்திருந்த வாழையும் சாய்ந்து உள்ளன. இதில் சுமார் 2 லட்சம் வாழைகள் சேதம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தூத்துக்குடி வட்டாரத்தில் 2 விவசாயிகள் 2 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த பப்பாளி மரங்களும் அடியோடு சாய்ந்து உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X