என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் - சென்னையை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் கைது
Byமாலை மலர்20 May 2020 5:01 AM GMT (Updated: 20 May 2020 5:01 AM GMT)
புதுக்கோட்டை அருகே கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் சென்னை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கீழ துருவாசகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 16-ந் தேதி திருமயம் அருகே மூங்கிதானப்பட்டி டாஸ்மாக் கடையில் ரூ.200 கள்ளநோட்டுகள் 2-ஐ கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற போது அவர் சிக்கினார். அவருடைய கூட்டாளிகள் திருமயத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30), முகமது இப்ராகிம் (27), முகமது நசுருதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் கள்ளநோட்டை கொடுத்ததாக சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்த சுரேசை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கன்னியாகுமரி மாவட்டம் புத்தனேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் கள்ளநோட்டை அச்சடித்ததாகவும், தன்னிடம் கொஞ்சம் கொடுத்து மாற்ற கூறியதாகவும் கூறினார்.
இதையடுத்து தனிப்படையினர் நாகர்கோவில் விரைந்து சென்று மணிகண்டனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கீழ துருவாசகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். கடந்த 16-ந் தேதி திருமயம் அருகே மூங்கிதானப்பட்டி டாஸ்மாக் கடையில் ரூ.200 கள்ளநோட்டுகள் 2-ஐ கொடுத்து மதுபானம் வாங்க முயன்ற போது அவர் சிக்கினார். அவருடைய கூட்டாளிகள் திருமயத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30), முகமது இப்ராகிம் (27), முகமது நசுருதீன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் கள்ளநோட்டை கொடுத்ததாக சென்னை வில்லிவாக்கம் ராஜாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்த சுரேசை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கன்னியாகுமரி மாவட்டம் புத்தனேரி பகுதியை சேர்ந்த மணிகண்டன் கள்ளநோட்டை அச்சடித்ததாகவும், தன்னிடம் கொஞ்சம் கொடுத்து மாற்ற கூறியதாகவும் கூறினார்.
இதையடுத்து தனிப்படையினர் நாகர்கோவில் விரைந்து சென்று மணிகண்டனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்தும் கத்தை, கத்தையாக கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X