என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரசு ஊழியர் சம்பளத்தை பிடித்தம் செய்தால் போராட்டம்- அ.தி.மு.க. அறிவிப்பு
புதுச்சேரி:
புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநில வருவாயை பெறுக்குவதற்கு கலால்துறை, போக்குவரத்து கேபிள் டி.வி. துறைமுக அபிவிருத்தி திட்டம் போன்ற பல விஷயங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட ஒரு சிலர் வருமானம் ஈட்ட மாநில ஒட்டுமொத்த வருவாயை இழக்க கூடாது.
ஆனால், ஆட்சியாளர்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் செய்ய கூடிய மதுபான தொழிலில் நஷ்டம் ஏற்பட கூடாது என்பதற்காக மதுபான கொள்கை விஷயத்தில் தொடர்ந்து தடுமாற்றத்துடன் முதல்- அமைச்சர் இருந்து வருகிறார்.
மதுபான விலை ஏற்றம் என்பது மது பிரியர்கள் தலையில் தான் வைக்கப்படும். நியாய மாக கார்ப்பரேஷன் அமைத்து மொத்த மது பான விற்பனையை அரசு செய்தாலோ, சில்லரை கடைகளை ஏலம் விட்டாலோ அரசுக்கு ரூ. ஆயிரம் கோடிக்கு மேலான வருமானம் கிடைக்கும்.
அதை விடுத்து, அரசு ஊழியர்கள் பல்வேறு தியாகத்திற்கு தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும் என நாராயணசாமி கூறுவது ஏற்புடையது அல்ல. வருவாயை பெருக்க தெள்ளத்தெளிவாக வழிமுறைகள் இருந்தும் அதை செய்யாமல் அரசு ஊழியர்கள் தலையில் கையை வைப்பது முதல்-அமைச்சருக்கு அழகல்ல.
அரசு ஊழியர்கள் சம்பளத்தை பிடித்தம் செய்வதை எதிர்த்து அ.தி.மு.க. மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறோம்.
மின்துறை தனியார் மயமானால் மின்சார விலை உயரும். தனியார் மயமாக்குதல் சம்பந்தமான அறிவிப்பில் காங்கிரஸ் அரசின் முடிவு என்ன என்பதனை தெரிவிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு எனக்கு தெரிந்து ரூ.10 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. இதனை என்ன செய்ய போகிறார்கள். ஏழை மக்களுக்காக இந்த பணத்தை இதுவரை பயன்படுத்தவில்லை.
அந்த பணத்தில் முதல்-அமைச்சர் தனக்கு தேவையான குறிப்பிட்ட துறைக்கு மட்டும் செலவு செய்வது கண்டிக்கதக்கது.முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் மஞ்சள் கார்டுக்கு அரிசி, துவரம் பருப்பு கொடுக்கலாம்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்