என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நெய்வேலி அருகே நிலக்கரி கடத்திய வாலிபர் கைது

    நெய்வேலி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நிலக்கரி கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.

    நெய்வேலி:

    நெய்வேலி வட்டம், ஊ.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் டிப்பர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதி இன்றி பழுப்பு நிலக்கரி கடத்தியது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து டிப்பர் லாரியின் டிரைவரான உ.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×