என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊட்டியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

    ஊட்டி அருகே காந்தல் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.
    ஊட்டி:

    ஊட்டி அருகே காந்தல் பகுதியில் இரு வாலிபர்கள் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஊட்டி இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது, கஞ்சா விற்ற 2 வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், காந்தல் கஸ்தூரி பாய் காலனியை சேர்ந்த அருண்(22), குருசடி காலனியை சேர்ந்த குட்வின் (22) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×