என் மலர்
செய்திகள்

கைது
விழுப்புரத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தியதாக 4 பேர் கைது
விழுப்புரத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தியதாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கனூர்:
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக புதுச்சேரியில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் மதுபானங்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.
இதற்கிடையே தமிழகத்தில் சமீபத்தில் மதுக்கடைகளை திறக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்திய நாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் எல்லைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தமிழகப் பகுதியான விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு மதுபானங்களை கடத்தியதாக பெரியபாபுசமுத்திரத்தை சேர்ந்த தீபக் (வயது28), முத்துவேல் (31), வாதானூரை சேர்ந்த கருணைவேல் (37), சிவசக்தி (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story






