என் மலர்
செய்திகள்

வேலூரில் முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம்- மாநகராட்சி கமிஷனர் உத்தரவு
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணிந்துதான் வெளியே செல்லவேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதோடு முக கவசம் இன்றி வெளியே செல்பவர்களிடம் 100 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. ஆனாலும் முக கவசம் இன்றி வெளியே செல்வது தொடர்கிறது.
வேலூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களிடம் 100 ரூபாய் அபராதம் வசூலிப்பதை தீவிரப்படுத்துமாறு மாநகராட்சி சுகாதாரத்துறையினருக்கு கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வெளியே செல்பவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வணிகர்கள், வியாபாரிகள் ஆகியோர் தங்கள் கடைகளுக்கு முன்பாக கை கழுவும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
உதாரணமாக 2 அல்லது 3 கடைகளை சேர்ந்தவர்கள் இணைந்தும், கைகழுவும் வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம்.
இது வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பானதாக அமையும் என்று கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.






