என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    601 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்- காந்தி எம்எல்ஏ வழங்கினார்

    வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர், தென்றல் நகர், சத்யா நகர், காந்தி நகர், பெரியார் நகர் கீழ்தேவதானம், மேல் தேவதானம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வாலாஜா:

    வாலாஜா ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட ரபிக் நகர், தென்றல் நகர், சத்யா நகர், காந்தி நகர், பெரியார் நகர் கீழ்தேவதானம், மேல் தேவதானம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    வன்னிவேடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறி அடங்கிய தொகுப்பினை 601 ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கினார்.

    மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத், ராணிப்பேட்டை நகர துணை செயலாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×