என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
அரிசி
சேலம் மாநகர் மாவட்ட பாமக மகளிர் அணி சார்பில் 100 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்
By
மாலை மலர்16 May 2020 6:57 AM GMT (Updated: 16 May 2020 6:57 AM GMT)

சேலம் மாநகர் மாவட்ட பாமக மகளிர் அணி சார்பில் 100 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், புளி ஆகிய மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.
சேலம்:
கொரோனா வைரஸ் பரவி வருவதை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சேலம் மாநகர் மாவட்ட பகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு பா.ம.க. சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. மகளிரணி சார்பில் சேலம் 4-ரோடு அருகே உள்ள 27-வது வார்டு முள்ளக்காடு பகுதியில் 100 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு ,சமையல் எண்ணெய், புளி ஆகிய மளிகை பொருட்களை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன.
அதனை மாவட்ட பா.ம.க. இளம்பெண்கள் செயலாளர் கவுசல்யா வழங்கினார். இதில் மாநில மகளிர் அணி செயலாளர் கலா, 27-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் கவிதா, பிரவீனா, சூரியகலா, ஜெசி, பூபதி, ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
