என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு
Byமாலை மலர்15 May 2020 4:27 PM GMT (Updated: 15 May 2020 4:27 PM GMT)
மணவாத்திப்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட 21 இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு பாராமரித்து வருகின்றனர்.
ஆதனக்கோட்டை:
பெருங்களூர் ஊராட்சிக்குட்பட்ட மணவாத்திப்பட்டி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தில் பர்னிச்சர் மற்றும் பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டதால் சொந்த ஊரான மணவாத்திப்பட்டிக்கு 20 நாட்களுக்கு முன் 21 பேர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மணவாத்திப்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 20 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் தங்களுடைய தனிமையை ஒரு ஓய்வாக கருதாமல், தங்களது நேரத்தை வீணாக்க நினைக்காத இளைஞர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கொண்டே பள்ளி வளாகத்தை சுற்றிலும் உள்ள முட்புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.மேலும் 25-க்கும் மேற்பட்ட வேம்பு, புங்கை மரக்கன்றுகளை நட்டு பாராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவில் வைரஸ் தொற்று இல்லை என முடிவு வந்ததால் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X