என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவை விவசாயிகளிடம் மத்திய அரசு நெல் கொள்முதல் செய்ய அனுமதி
Byமாலை மலர்15 May 2020 1:36 PM GMT (Updated: 15 May 2020 1:36 PM GMT)
புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் நவரை பருவ நெல் அறுவடை விரைவில் விவசாயிகளால் தொடங்கப்பட உள்ளது.
இந்த நெல்லை, இந்திய உணவுக் கழகமே நேரடியாக கொள்முதல் செய்தால், கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பலனளிப்பதாக இருக்கும் என மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த 6-ந்தேதி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
மத்திய வேளாண்துறை மந்திரியிடம் காணொலி காட்சி மூலமாக, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனும் கோரிக்கை வைத்திருந்தார். இதன்படி மே 15-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரையிலான ராபி பருவத்தின்போது, புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.
இதனால் விவசாயி களின் விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் நவரை பருவ நெல் அறுவடை விரைவில் விவசாயிகளால் தொடங்கப்பட உள்ளது.
இந்த நெல்லை, இந்திய உணவுக் கழகமே நேரடியாக கொள்முதல் செய்தால், கொரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பலனளிப்பதாக இருக்கும் என மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுக்கு, முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த 6-ந்தேதி கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.
மத்திய வேளாண்துறை மந்திரியிடம் காணொலி காட்சி மூலமாக, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனும் கோரிக்கை வைத்திருந்தார். இதன்படி மே 15-ந் தேதி முதல் ஆகஸ்டு 30-ந் தேதி வரையிலான ராபி பருவத்தின்போது, புதுவை நெல் விவசாயிகளிடம் இருந்து சுமார் 20 ஆயிரம் டன் அரிசி அளவிற்கான நெல்லை இந்திய உணவுக் கழகத்தின் மூலம் நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்துள்ளார்.
இதனால் விவசாயி களின் விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X