என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
25 நாட்களுக்கு பின்னர் சிவகங்கையில் மீண்டும் கொரோனா
Byமாலை மலர்14 May 2020 7:55 AM GMT (Updated: 14 May 2020 7:55 AM GMT)
கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி:
கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் பூரண குணமடைந்தனர். படிப்படியாக அனைவரும் வீடு திரும்பினர்.
கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 25 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் காரைக்குடி ரெயில்வே குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கொரோனா பாதித்த பெண் சமீபத்தில் மும்பையில் இருந்து காரைக்குடி திரும்பியது தெரிய வந்துள்ளது. அவர் வசித்து வந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி திருப்பத்தூரைச் சேர்ந்த 48 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 11 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் பூரண குணமடைந்தனர். படிப்படியாக அனைவரும் வீடு திரும்பினர்.
கடந்த மாதம் 19-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது 25 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் காரைக்குடி ரெயில்வே குட்ஷெட் பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கொரோனா பாதித்த பெண் சமீபத்தில் மும்பையில் இருந்து காரைக்குடி திரும்பியது தெரிய வந்துள்ளது. அவர் வசித்து வந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக விளங்கிய சிவகங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X