என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்13 May 2020 7:27 AM GMT (Updated: 13 May 2020 7:27 AM GMT)
கோயம்பேடு சந்தை தொடர்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
சென்னை, திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 391 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 25 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். மற்றவர்களுக்கு கொரோனா பாதித்தவர்களுடன் உள்ள தொடர்பால் நோய் தாக்கி உள்ளது.
கடந்த வாரம் 6-ந்தேதி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறும் 145 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. ஒரு வாரத்தில் 246 பேருக்கு நோய் பரவி உள்ளது. கோயம்பேடு சந்தையுடன் உள்ள தொடர்பே நோய் தொற்றுக்கு காரணம் ஆகும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துவிட்டது.
சென்னை, திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 391 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 25 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். மற்றவர்களுக்கு கொரோனா பாதித்தவர்களுடன் உள்ள தொடர்பால் நோய் தாக்கி உள்ளது.
கடந்த வாரம் 6-ந்தேதி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறும் 145 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. ஒரு வாரத்தில் 246 பேருக்கு நோய் பரவி உள்ளது. கோயம்பேடு சந்தையுடன் உள்ள தொடர்பே நோய் தொற்றுக்கு காரணம் ஆகும்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X