search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா

    கோயம்பேடு சந்தை தொடர்பால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    செங்கல்பட்டு:

    சென்னை, திருவள்ளூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 391 ஆக அதிகரித்துள்ளது.

    இதில் 25 பேர் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். மற்றவர்களுக்கு கொரோனா பாதித்தவர்களுடன் உள்ள தொடர்பால் நோய் தாக்கி உள்ளது.

    கடந்த வாரம் 6-ந்தேதி நிலவரப்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறும் 145 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது. ஒரு வாரத்தில் 246 பேருக்கு நோய் பரவி உள்ளது. கோயம்பேடு சந்தையுடன் உள்ள தொடர்பே நோய் தொற்றுக்கு காரணம் ஆகும்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 24 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதலாக 27 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துவிட்டது.
    Next Story
    ×