என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீன் மார்க்கெட்
    X
    மீன் மார்க்கெட்

    ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது

    ஊரடங்கு உத்தரவுக்கு பின் 40 நாட்களுக்கு பிறகு ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பாலம் அருகில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட போதிலும், மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்படாததால் ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட் வழக்கம்போல் செயல்பட்டது. அப்போது சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் முந்தியடித்து கொண்டு மீன்களை வாங்கி சென்றனர். இதுநோய் பரவுதலுக்கு காரணமாக இருந்ததால் மாநகராட்சி அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் விற்பனைக்கு தடை விதித்தனர். அன்றையதினத்தில் இருந்து மீன் மார்க்கெட் மூடப்பட்டது.

    இந்தநிலையில் மீன் மார்க்கெட் செயல்பட அதிகாரிகள் அனுமதி வழங்கினார்கள். அதன்படி சுமார் 40 நாட்களுக்கு பிறகு நேற்று மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது. அங்கு பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் மீன் கடைகளுக்கு முன்பு தடுப்பு கம்புகள் கட்டப்பட்டு இருந்தன. முக கவசம் அணிந்து வரும் பொதுமக்களுக்கு மட்டுமே மீன் மார்க்கெட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும், மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் பொதுமக்களின் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல் ஈரோட்டில் இறைச்சி கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. அந்த கடைகளில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடித்தனர். சில கடைகளில் தயாராக வைக்கப்பட்டு இருந்த இறைச்சி பார்சல் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டது.
    Next Story
    ×