என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கட்டுக்குள் வந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கித்தவிக்கும் புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் பரவல் தடுக்கப்பட்டு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொருவராக பாதிக்கப்பட்டு வருவது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடக்க நிலையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று எதுவும் ஏற்படவில்லை. கடந்த மாதம் 20-ந்தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு நகரில் ஒருவருக்கும், ஆயிங்குடியில் ஒருவருக்கும் என 2 பேருக்கு தொற்று ஒரே நாளில் அறிவிக்கப்பட்டது. இந்த இருவரும் திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொடர்ச்சியாக விராலி மலை சுற்று வட்டாரத்தில் 2 பேருக்கு ஒரேநாளில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலுப்பூர் வட்டாரத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 3 பேரும் புதுக்கோட்டை பழைய மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊரக நலப்பணிகள் துணை இயக்குனர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் இந்த சிகிச்சை மையத்திற்கு பொறுப்பு வகிக்கின்றனர். சுழற்சி அடிப்படையில் தொற்றாளர்களை டாக்டர்கள் சந்தித்து அவர்களின் உடல் நலனில் உள்ள முன்னேற்றம் குறித்து கேட்டறிகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் இஞ்சிச்சாறு வழங்கப்படுகிறது. 3 பேரும் நலமுடன் இருப்பதாக டாக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் பரவல் தடுக்கப்பட்டு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது ஒவ்வொருவராக பாதிக்கப்பட்டு வருவது அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×