என் மலர்
செய்திகள்

கடலூரில் இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 394 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இதையொட்டி மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தற்காலிக காய்கறி சந்தை, மீன் சந்தைகளில் சமூக இடைவெளி விட்டு மீன் வாங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் மீன்கள் அதிகம் கிடைப்பதால் ஏராளமான மீன் மார்க் கெட்டுகள் உள்ளது. ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக கடலூர் நகர்பகுதியான துறைமுகம் பகுதியில் பிடிக்கப்படும் மீன்கள் சிப்காட் பகுதியிலும், தேவனாம் பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் உப்பனாறு பகுதியிலும் மீன்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனுமதிக்கப்பட்ட 2 இடங்களில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
இந்த மீன் மார்க்கெட்டு காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படுகிறது. மீன் மார்க்கெட்டில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
அதே நேரத்தில் மஞ்சக்குப்பம் பகுதியில் தற்காலிகமாக இறைச்சி கடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு இறைச்சி வாங்க பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர்.






