என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி பலி
    X
    தொழிலாளி பலி

    லாஸ்பேட்டையில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பலி

    லாஸ்பேட்டையில் கட்டிட தொழிலாளி தவறி விழுந்து இறந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தர்மாபுரி தனகோடி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (வயது56). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று லாஸ்பேட்டை ராஜாஜி நகரில் கட்டிட பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழ் தளத்துக்கு நடந்து வந்த போது எதிர்பாராத விதமாக தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்து மயங்கி போன அவரை அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கங்காதரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரின் மகன் முரளி கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×