என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கோயம்பேட்டில் இருந்து வந்த புதுவை வியாபாரிக்கு கொரோனா
கோயம்பேட்டில் இருந்து வந்த புதுவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது 3-வது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் இதுவரை 11 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அதில், மாகியை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
2 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில், ஒருவர் கோயம்பேடு சந்தையில் லாரி டிரைவராக இருந்தவர் ஆவார்.
திருபுவனை அருகே உள்ள க.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இவர், கோயம்பேட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஊர் திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவையை சேர்ந்த கோயம்பேடு வியாபாரி ஒருவரை கொரோனா தாக்கி இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர், திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இவர், கடந்த வாரம் கோயம்பேட்டில் இருந்து செல்லிப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏற்கனவே கோயம்பேட்டில் நோய் பரவிய தகவல் வெளியானதால் அவரது குடும்பத்தினர் அவரிடம் நீங்கள் நேராக வீட்டுக்கு வரவேண்டாம். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு வாருங்கள் என்று கூறினார்கள்.
எனவே, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தார்கள். 2 கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தது.
பின்னர் 3-வது கட்ட பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் புதுவையில் கொரோனா தாக்கி ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் இதுவரை 11 பேரை கொரோனா தாக்கி உள்ளது. அதில், மாகியை சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். 8 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
2 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில், ஒருவர் கோயம்பேடு சந்தையில் லாரி டிரைவராக இருந்தவர் ஆவார்.
திருபுவனை அருகே உள்ள க.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இவர், கோயம்பேட்டில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். ஊர் திரும்பிய அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுவையை சேர்ந்த கோயம்பேடு வியாபாரி ஒருவரை கொரோனா தாக்கி இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர், திருக்கனூர் அருகே உள்ள செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இவர், கடந்த வாரம் கோயம்பேட்டில் இருந்து செல்லிப்பட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். ஏற்கனவே கோயம்பேட்டில் நோய் பரவிய தகவல் வெளியானதால் அவரது குடும்பத்தினர் அவரிடம் நீங்கள் நேராக வீட்டுக்கு வரவேண்டாம். அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்து விட்டு வாருங்கள் என்று கூறினார்கள்.
எனவே, கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அங்கு அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்தார்கள். 2 கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்தது.
பின்னர் 3-வது கட்ட பரிசோதனை நடந்தது. அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. அதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.
இதன்மூலம் புதுவையில் கொரோனா தாக்கி ஆஸ்பத்திரியில் இருப்பவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
Next Story






