என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவறுகளுக்கு அதிகாரிகள் துணை போகக்கூடாது- கவர்னர் கிரண்பேடி
Byமாலை மலர்9 May 2020 9:41 AM GMT (Updated: 9 May 2020 9:41 AM GMT)
போலீசாக இருந்தாலும் சரி, கலால் போலீஸ் என்றாலும் சரி என்றைக்கும் தவறுகளுக்கு துணை செல்லாதீர்கள் என்று புதுவை கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மது விற்பனையால் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் மூலம்தான் நமக்கு சம்பளம், நிர்வாக செலவு, இலவச அரிசி வழங்குகிறோம். இது திட்டமிடப்பட்ட குற்றம். தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. நிர்வாக இயலாமை என்ற கோணத்தில் சி.பி.ஐ. அணுகி வருகிறது. கண்காணிப்பில் போலீசாரின் பங்கு முக்கியமானது. கலால் துறைக்கென ரெய்டு செல்ல தனி போலீசார் உள்ளனர்.
இந்நேரத்தில் புதுவை போலீசாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். போலீசாக இருந்தாலும் சரி, கலால் போலீஸ் என்றாலும் சரி என்றைக்கும் தவறுகளுக்கு துணை செல்லாதீர்கள். விசாரணை நடத்தினால் நீங்களும் அங்கம் வகிப்பீர்கள். பதில் சொல்ல வேண்டியிருக்கும். டி.ஜி.பி. போலீசாரின் குறைகளை நேரடியாக கேட்கிறார்.
எனவே போலீசார் யாருடனும் தப்பாக சேராமல் டி.ஜி.பி.யிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம். தாய்நாட்டிற்கு சேவை செய்வதுதான் போலீசாரின் கடமை. உங்களின் கடின உழைப்பை தொடருங்கள். எந்த தப்பும் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாட்ஸ்-அப் மூலம் மது விற்பனை ஆதாரம் கேட்கப்பட்டது.
ஆனால் ஒரு கேஸ்கூட வரவில்லை. இது ரொம்ப நல்ல விஷயம். புதுவையில் கொரோனா பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள போலீசாருக்கு நன்றி. புதுவை மக்கள் உங்களை வாழ்த்துகின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை கவர்னர் கிரண்பேடி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஊரடங்கில் கள்ளச்சந்தையில் மது விற்பனையால் பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வருவாய் மூலம்தான் நமக்கு சம்பளம், நிர்வாக செலவு, இலவச அரிசி வழங்குகிறோம். இது திட்டமிடப்பட்ட குற்றம். தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது. நிர்வாக இயலாமை என்ற கோணத்தில் சி.பி.ஐ. அணுகி வருகிறது. கண்காணிப்பில் போலீசாரின் பங்கு முக்கியமானது. கலால் துறைக்கென ரெய்டு செல்ல தனி போலீசார் உள்ளனர்.
இந்நேரத்தில் புதுவை போலீசாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். போலீசாக இருந்தாலும் சரி, கலால் போலீஸ் என்றாலும் சரி என்றைக்கும் தவறுகளுக்கு துணை செல்லாதீர்கள். விசாரணை நடத்தினால் நீங்களும் அங்கம் வகிப்பீர்கள். பதில் சொல்ல வேண்டியிருக்கும். டி.ஜி.பி. போலீசாரின் குறைகளை நேரடியாக கேட்கிறார்.
எனவே போலீசார் யாருடனும் தப்பாக சேராமல் டி.ஜி.பி.யிடம் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம். தாய்நாட்டிற்கு சேவை செய்வதுதான் போலீசாரின் கடமை. உங்களின் கடின உழைப்பை தொடருங்கள். எந்த தப்பும் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாட்ஸ்-அப் மூலம் மது விற்பனை ஆதாரம் கேட்கப்பட்டது.
ஆனால் ஒரு கேஸ்கூட வரவில்லை. இது ரொம்ப நல்ல விஷயம். புதுவையில் கொரோனா பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள போலீசாருக்கு நன்றி. புதுவை மக்கள் உங்களை வாழ்த்துகின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X