என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை போலீசார்"
- முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.
- தகராறை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலை மிரட்டல் விட்டனர்.
பாகூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை முயற்சி செய்தார். அவர் சிகிச்சைகாக புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரைப் பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருமாம்பாக்கம் பகுதிக்கு வந்தனர்.
பின்னர் புதுவையில் மதுபாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதால் மது குடிக்க முடிவு செய்தனர்.
முள்ளோடை என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் பாரில் அவர்கள் அதிக அளவில் மது வாங்கி நீண்ட நேரம் அருந்தியுள்ளனர்.
போதை தலைக்கு ஏறி பார் ஊழியர்கள் மற்றும் அருகில் மது அருந்தியவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குள்ளே தகராறு ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதனை தடுக்க சென்ற பார் ஊழியர்களை கையாலும் பீர் பாட்டிலாலும், தாக்கி கொலைமிரட்டல் விட்டனர்.
தகவல் அறிந்த புதுவை ரோந்து போலீசார் அங்கு சென்றனர். அவர்களையும், தமிழக வாலிபர்கள் தாக்கினர்.
இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கடலூர் மாவட்டம் வடலூர் ஆர்.சி காலனி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 30), அதே பகுதியை சேர்ந்த ஜீவஜோதி (27), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சரத்குமார் (25), புவனகிரி அடுத்த கரைமேடு பின்நல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆசைமணி (27), சவுந்தரராஜன் (24), அருள்பாண்டி (20), அருளரசன் (22), வேல்முருகன் (23) என்பது தெரியவந்தது.
இது சம்பந்தமாக பார் ஊழியர் மூலகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்