என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குன்னூரில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
Byமாலை மலர்8 May 2020 7:22 AM GMT (Updated: 8 May 2020 7:22 AM GMT)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குன்னக்கொம்பை கோடேரி பகுதியை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகள் மங்கம்மாள்(வயது19). பிளஸ்-2 முடித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலை இல்லாததால் வீட்டில் இருந்தார். நேற்று பகல் 12 மணியளவில் துணியை துவைத்து விட்டு காய போடுவதற்காக மொட்டை மாடிக்கு சென்றார். அங்குள்ள கம்பியில் துணிகளை மங்கம்மாள் காய போட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மங்களம்மாள் கை அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது சத்தம் கேட்ட மங்கம்மாளின் தம்பி திருப்பதி(14), அருகே வசித்து வரும் சரண்யா ஆகியோர் விரைந்து வந்து மங்கம்மாளை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த திருப்பதி, சரண்யா ஆகிய 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள குன்னக்கொம்பை கோடேரி பகுதியை சேர்ந்தவர் அமாவாசை. இவரது மகள் மங்கம்மாள்(வயது19). பிளஸ்-2 முடித்து விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். தற்போது வேலை இல்லாததால் வீட்டில் இருந்தார். நேற்று பகல் 12 மணியளவில் துணியை துவைத்து விட்டு காய போடுவதற்காக மொட்டை மாடிக்கு சென்றார். அங்குள்ள கம்பியில் துணிகளை மங்கம்மாள் காய போட்டு கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மங்களம்மாள் கை அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது பட்டது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது சத்தம் கேட்ட மங்கம்மாளின் தம்பி திருப்பதி(14), அருகே வசித்து வரும் சரண்யா ஆகியோர் விரைந்து வந்து மங்கம்மாளை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மங்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த திருப்பதி, சரண்யா ஆகிய 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X