என் மலர்
செய்திகள்

அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும்- ரவி எம்எல்ஏ அறிக்கை
அரக்கோணம்:
வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் நகராட்சி, வாலாஜாப்பேட்டை நகராட்சி, இராணிப்பேட்டை நகராட்சி, மேல்விஷாரம் நகராட்சி, ஆற்காடு நகராட்சி மற்றும் வேலூர் மாநகராட்சியை சேர்ந்த காட்பாடி வடக்கு பகுதி, காட்பாடி தெற்கு பகுதி ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு நாட்களில் நேற்று வரை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
அதற்கான முழு செலவையும் வேலூர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. ஏற்றுக் கொண்டது. தற்போது ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை இந்த 7 உணவகங்களில் மக்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கப்படும். அதற்கான முழு செலவையும் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வே ஏற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






