என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் கடை
    X
    ரேசன் கடை

    ரேசன் கடைகளில் இலவசமாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

    சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் ரேசன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை:

    தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி மே மாதத்திற்கு அனைத்து (பண்டகமில்லா குடும்ப அட்டை நீங்கலாக) குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் ஆகியவை அட்டை தாரர்களின் உரிம அளவின்படி விலையில்லாமல் நியாய விலைக்கடைகள் மூலம் இன்று (4-ந்தேதி) முதல் விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும் மேற்படி அத்தியாவசியப் பொருட்களோடு முன்னுரிமை, முன்னுரிமையற்ற மற்றும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

    குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை பெற ஏதுவாக பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் உள்ளிட்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டு டோக்கன்கள் கடந்த 2 நாட்களாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றி பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×