என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
சிவகங்கை மாவட்டம் தப்பியது எப்படி? கலெக்டர் விளக்கம்
கொரோனாவின் பிடியில் இருந்து சிவகங்கை மாவட்டம் தப்பியது எப்படி என்பது குறித்து அம்மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகங்கை:
தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் சிவகங்கை மாவட்டம் தன்பக்கம் ஈர்த்து உள்ளது. இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் அறிகுறிகள் வந்த உடனேயே மாவட்ட நிர்வாகம் அதை எதிர்கொள்ள தயார் ஆகிவிட்டது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், போக்குவரத்து துறை, காவல்துறை என அனைத்து துறையினரையும் அழைத்து பேசி, அனைவரும் ஒருங்கிணைந்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மார்ச் 1ந் தேதிக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த 5 ஆயிரத்து 11 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
28 நாட்கள் சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று தொடர்ந்து கண்காணித்தனர். இந்த 28 நாட்களும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் நோய் தொற்று பரவுவது தவிர்க்கப்பட்டது.
மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 41 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு 5 வயது சிறுமி உள்பட 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்களால் சமூக பரவல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது. இன்று வரை தீவிரமாக காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அனைத்து துறை அரசு அதிகாரிகள், குறிப்பாக சிவகங்கை மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால் கட்டுப்படுத்த முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் சிவகங்கை மாவட்டம் தன்பக்கம் ஈர்த்து உள்ளது. இதுகுறித்து சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் அறிகுறிகள் வந்த உடனேயே மாவட்ட நிர்வாகம் அதை எதிர்கொள்ள தயார் ஆகிவிட்டது. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், போக்குவரத்து துறை, காவல்துறை என அனைத்து துறையினரையும் அழைத்து பேசி, அனைவரும் ஒருங்கிணைந்து தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இங்கு விவசாயம் முக்கிய தொழிலாக இருந்தாலும், இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சீனா உள்பட பல்வேறு நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த மார்ச் 1ந் தேதிக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த 5 ஆயிரத்து 11 பேர், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
28 நாட்கள் சுகாதாரத்துறையினர் அவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என்று தொடர்ந்து கண்காணித்தனர். இந்த 28 நாட்களும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலம் நோய் தொற்று பரவுவது தவிர்க்கப்பட்டது.
மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களில் 41 பேர் கண்டறியப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பு 5 வயது சிறுமி உள்பட 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அவர்களால் சமூக பரவல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
இந்த நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டது. இன்று வரை தீவிரமாக காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், அனைத்து துறை அரசு அதிகாரிகள், குறிப்பாக சிவகங்கை மாவட்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதனால் கட்டுப்படுத்த முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






