என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாததால் தந்தை தற்கொலை
ஆலங்குடி அருகே மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாத வேதனையில் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகிலுள்ள வாரப்பூர் கரையப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 60). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.
மகன்கள் முருகேசன், சரவணப்பாண்டி இருவரும் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தனர். சரவணப்பாண்டி ஓராண்டுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் சின்னத்தம்பி மூத்தமகன் முருகேசனுக்கு திருமணம் செய்து வைக்க ஊருக்கு வரச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் முருகேசன் வரவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த சின்னதம்பி பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு வயலில் மயங்கி கிடந்தார். தந்தையை காணவில்லை என்று சரவணபாண்டி தேடியபோது அவர் வயலில் மயங்கி கிடப்பது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதம்பி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஆலங்குடி அருகிலுள்ள வாரப்பூர் கரையப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 60). இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவரும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர்.
மகன்கள் முருகேசன், சரவணப்பாண்டி இருவரும் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தனர். சரவணப்பாண்டி ஓராண்டுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் சின்னத்தம்பி மூத்தமகன் முருகேசனுக்கு திருமணம் செய்து வைக்க ஊருக்கு வரச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன் முருகேசன் வரவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த சின்னதம்பி பூச்சி கொல்லி மருந்தை குடித்து விட்டு வயலில் மயங்கி கிடந்தார். தந்தையை காணவில்லை என்று சரவணபாண்டி தேடியபோது அவர் வயலில் மயங்கி கிடப்பது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதம்பி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






