என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
Byமாலை மலர்30 April 2020 2:25 PM GMT (Updated: 30 April 2020 2:25 PM GMT)
நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். பாறை இடுக்கில் சிக்கி இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு அகில்(வயது 20), நிகில் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் அகில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் அகில் தனது தம்பி நிகில் மற்றும் உறவினர்களுடன் மரப்பாலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அகில் பாறை மீது நின்று செல்பி எடுக்க முயன்றார். அப்போது கால் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்து சுழலில் சிக்கினார். தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய அகிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருள் சூழ தொடங்கியதாலும், மழை பெய்ததாலும் மீட்பு பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாறை இடுக்கில் சிக்கி இருந்த அகிலின் உடல் மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன். இவர் அதே பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு அகில்(வயது 20), நிகில் ஆகிய 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் அகில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் அகில் தனது தம்பி நிகில் மற்றும் உறவினர்களுடன் மரப்பாலத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.
அங்கு அகில் பாறை மீது நின்று செல்பி எடுக்க முயன்றார். அப்போது கால் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்து சுழலில் சிக்கினார். தொடர்ந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த உறவினர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரில் மூழ்கிய அகிலை தேடும் பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியில் இருள் சூழ தொடங்கியதாலும், மழை பெய்ததாலும் மீட்பு பணி கைவிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாறை இடுக்கில் சிக்கி இருந்த அகிலின் உடல் மீட்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X