என் மலர்
செய்திகள்

தயாரிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக இருப்பு வைக்கப்பட்டுள்ள கயிறுகள்.
வடகாட்டில் கயிறு தயாரிக்கும் தொழில் முடங்கியது
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கயிறு தயாரிக்கும் தொழில் முடங்கியது.
வடகாடு:
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், மறமடக்கி, அரையப்பட்டி போன்ற ஊர்களில் தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலிக்கு வேலை பார்த்து அன்றாட வாழ்க்கையை ஓட்டி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் மற்றும் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் அன்றாட செலவுகளுக்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.
தேங்காய் மட்டைகளில் இருந்து நார்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் ஆலங்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், கறம்பக்காடு மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலும் அதிகளவில் உள்ளது. தேங்காய் மட்டைகளில் இருந்து வருகின்ற நார்களை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் மூலமாக, பிரித்தெடுத்து, தேங்காய் நார், மஞ்சிக் கட்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு, 35 கிலோ கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னர் அவை சரக்குவேன்கள் மூலமாக, கயிறு தயாரிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 2 வகையான கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கை ராட்டைகள் மூலமாக அதிக தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி ஆகும் கயிறுகள், வெற்றிலை கொடி, கப்பல் கட்டுமான தொழில், பந்தல்கள் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி தரம் வாய்ந்த மெஷின் கயிறுகள் சிறுகுறு முதலீட்டாளர்கள் மூலமாக, சுமார் ரூ.7 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு, குறைந்த தொழிலாளர்கள் மூலமாக, தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கை ராட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் கயிறுகள் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரையிலும், எந்திர கயிறுகள் கிலோ ரூ.27 முதல் ரூ.28 என வியாபாரிகளால் வாங்கப்பட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
கயிறுகளை சேலம், பட்டுக்கோட்டை, ஆலங்குடி போன்ற ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் மூலம் மும்பை, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கும் மேட் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படும்.
இந்தநிலையில், தற்போது ஊரடங்கால், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலையுள்ள உற்பத்தி செய்யப்பட்டுள்ள கயிறுகள் தேங்கி உள்ளதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், மறமடக்கி, அரையப்பட்டி போன்ற ஊர்களில் தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலிக்கு வேலை பார்த்து அன்றாட வாழ்க்கையை ஓட்டி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் மற்றும் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் அன்றாட செலவுகளுக்கு கூட பணமில்லாமல் தவித்து வருகின்றனர்.
தேங்காய் மட்டைகளில் இருந்து நார்களை பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் ஆலங்குடி, கொத்தமங்கலம், குளமங்கலம், கறம்பக்காடு மற்றும் தஞ்சை மாவட்டம் பேராவூரணியிலும் அதிகளவில் உள்ளது. தேங்காய் மட்டைகளில் இருந்து வருகின்ற நார்களை பிரித்தெடுக்கும் எந்திரங்கள் மூலமாக, பிரித்தெடுத்து, தேங்காய் நார், மஞ்சிக் கட்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு, 35 கிலோ கட்டு ரூ.700 முதல் ரூ.800 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பின்னர் அவை சரக்குவேன்கள் மூலமாக, கயிறு தயாரிக்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 2 வகையான கயிறுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கை ராட்டைகள் மூலமாக அதிக தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி ஆகும் கயிறுகள், வெற்றிலை கொடி, கப்பல் கட்டுமான தொழில், பந்தல்கள் அமைத்தல் போன்ற வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி தரம் வாய்ந்த மெஷின் கயிறுகள் சிறுகுறு முதலீட்டாளர்கள் மூலமாக, சுமார் ரூ.7 லட்சம் வரை செலவு செய்யப்பட்டு, குறைந்த தொழிலாளர்கள் மூலமாக, தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கை ராட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் கயிறுகள் கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரையிலும், எந்திர கயிறுகள் கிலோ ரூ.27 முதல் ரூ.28 என வியாபாரிகளால் வாங்கப்பட்டு, வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
கயிறுகளை சேலம், பட்டுக்கோட்டை, ஆலங்குடி போன்ற ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் மூலம் மும்பை, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கும் மேட் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படும்.
இந்தநிலையில், தற்போது ஊரடங்கால், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலையுள்ள உற்பத்தி செய்யப்பட்டுள்ள கயிறுகள் தேங்கி உள்ளதாக முதலீட்டாளர்கள் கூறுகின்றனர். இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Next Story






