என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருபுவனை பகுதியில் தொடர் மின்தடை- பொதுமக்கள் அவதி
திருபுவனை:
கடந்த 3 நாட்களாக திருபுவனை, திருவாண்டார்கோவில், மதகடிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மேலும் மின் விநியோகம் நேரங்களில் சீரான மின் சாரம் வழங்கப்படாமல் குறைந்த அழுத்த மின்சாரமே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு இதே நிலை நீடித்ததால் அப்பகுதியை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காற்று வசதிக்காக வீட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலை பகுதிகளில் திரிகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவரவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது திருபுவனை பகுதியில் மின் தடை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதால் கொரோனா வைரஸ் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுதாகும் நிலை உண்டாகி உள்ளது. எனவே தற்போது ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் தடையின்றி மின்சாரமும், குறைந்த அழுத்தம் இல்லாமல் சீரான மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்