search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்தடை
    X
    மின்தடை

    திருபுவனை பகுதியில் தொடர் மின்தடை- பொதுமக்கள் அவதி

    திருபுவனை பகுதியில் மின் தடை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதால் கொரோனா வைரஸ் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருபுவனை:

    கடந்த 3 நாட்களாக திருபுவனை, திருவாண்டார்கோவில், மதகடிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மேலும் மின் விநியோகம் நேரங்களில் சீரான மின் சாரம் வழங்கப்படாமல் குறைந்த அழுத்த மின்சாரமே உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு இதே நிலை நீடித்ததால் அப்பகுதியை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காற்று வசதிக்காக வீட்டை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலை பகுதிகளில் திரிகின்றனர்.

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அவரவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் தற்போது திருபுவனை பகுதியில் மின் தடை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதால் கொரோனா வைரஸ் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் குறைந்த மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுதாகும் நிலை உண்டாகி உள்ளது. எனவே தற்போது ஊரடங்கு உத்தரவையொட்டி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் தடையின்றி மின்சாரமும், குறைந்த அழுத்தம் இல்லாமல் சீரான மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×