search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    7 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை

    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.
    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 17 நாட்களாக புதிதாக கொரோனா நோய் தொற்று ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று முன்தினம் 3 மாவட்டங்களில் மட்டும்தான் கொரோனா வைரசின் தாக்கம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று 5 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த 3 பேருக்கும் முதன்மை தொற்று என கண்டறியப்பட்டு உள்ளது.

    Next Story
    ×