என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்.
வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் பாதிப்பு- போலீசார் 41 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை
வாணியம்பாடி இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் பணி செய்த போலீசார் 41 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது பரிசேதனையில் தெரியவந்துள்ளது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டது. வளாகம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த போலீசார் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் பணியின் போது சந்தித்த ஆம்பூர் வாணியம்பாடி போலீசார் என மொத்தம் 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனை தொடர்ந்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Next Story






