search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரிசி
    X
    அரிசி

    வேலூரில் 500 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள்: விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் வழங்கப்பட்டது

    வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் 500 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 10 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேலூர்:

    வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடுகிடுப்பைகாரர்கள், நரிக்குறவர்கள், இருளர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உட்பட 10 வகையான மளிகை பொருட்களை காட்பாடி தாசில்தார் ஆர்.பாலமுருகன் தலைமையில் வழங்கப்பட்டது. உடன் நாஷ்வா தொண்டு நிறுவன தலைவர் கணேஷ், வழக்கறிஞர் பி.டி.கே.மாறன் மற்றும் காட்பாடி ரெட் கிராஸ் கிளையின் நிர்வாகிகள் உள்ளனர்.

    வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் 500 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 10 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    அதேபோல் வேலூர் காய்கறி மார்க்கெட் தினக் கூலிகளாக வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், வேலூர் கொசப்பேட்டை பகுதி எஸ்.எஸ்.கே. மானியம் சார்ந்த தினக்கூலி பெண்கள், தோட்டபாளையம் பகுதியை சார்ந்த தினக்கூலி பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகளுக்கும் அரிசி உட்பட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    மேலும் சில்க் மில், ஆபீசர் லைன் மற்றும் வி.ஐ.டி. அருகே உள்ள ஆட்டோ டிரைவர்கள், வேலூர் நகர இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் மெக்கானிக்களுக்கள் குடும்பத்தினருக்கும் அரிசி உட்பட உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சை பெற வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி உட்பட 10 வகையான சமையல் பொருட்கள் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில் நாஷ்வா தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் எம்.கணேஷ், வழக்கறிஞர் பி.டி.கே.மாறன், காட்பாடி ரெட் கிராஸ் கிளை செயலாளர் ஜனார்த்தனன், துணை தலைவர் சீனிவாசன், பொருளாளர் பழனி, செயற்குழு உறுப்பினர் காந்திலால் பட்டேல் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உட்பட பலர் நிகழ்வுக்கு உதவி புரிந்தனர்.

    Next Story
    ×